Wednesday, May 13, 2015

TNOU ‌பி.எ‌ட். படி‌‌ப்புக‌ளி‌‌ல் சே‌ர்வத‌ற்கான ‌வி‌ண்ண‌‌ப்ப‌ங்க‌ள் ஜூ‌ன் 9ஆ‌ம் தே‌தி முத‌ல் வழ‌ங்க‌ப்படு‌ம்.


மி‌ழ்நாடு ‌திற‌ந்த‌நிலை ப‌ல்ககலை‌க்கழக‌த்‌தி‌ல் (TNOU) ‌பி.எ‌ட். படி‌‌ப்புக‌ளி‌‌ல் சே‌ர்வத‌ற்கான ‌வி‌ண்ண‌‌ப்ப‌ங்க‌ள் ஜூ‌ன் 9ஆ‌ம் தே‌தி முத‌ல் வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
த‌மி‌ழ்நாடு ‌திற‌ந்த‌நிலை ப‌ல்ககலை‌க்கழக‌த்‌தி‌ல் (TNOU) ‌பி.எ‌ட். படி‌‌ப்புக‌ளி‌‌ல் சே‌ர்வத‌ற்கான ‌வி‌ண்ண‌‌ப்ப‌ங்க‌ள் ஜூ‌ன் 9ஆ‌ம் தே‌தி முத‌ல் வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதுதொட‌ர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக‌ம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2015 ஆம் ஆண்டுக்கான பி.எட். படிப்பிற்கு விண்ணப்பங்கள் ஜூன் 9 ஆம் தேதி (திங்கள்கிழமை) ந‌ண்பக‌‌ல் 12 மணி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ் வழி படிப்பிற்கு 500 இடங்கள், ஆங்கில வழி படிப்பிற்கு 500 இடங்கள் என மொத்தம் 1,000 இடங்கள் உள்ளன.
விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 14ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள், பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு மையங்களான, அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரி சென்னை, எஸ்.டி. இந்து கல்லூரி நாகர்கோவில், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி வேலூர், மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி விழுப்புரம் ஆகியவற்றில் விநியோகம் செய்யப்படுகின்றன.
மேலும், மண்டல மையங்களான, எஸ்.என்.ஆர். கல்லூரி கோவை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம் மதுரை, வருவான் வடிவேலன் பி.எட். கல்லூரி தருமபுரி, ஷிவானி பொறியியல் கல்லூரி திருச்சி, புனித கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரி சென்னை, டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரி கோவை, இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி தஞ்சாவூர், கிரசன்ட் கல்வியியல் கல்லூரி திருவண்ணாமலை, கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரி மசக்காளிபட்டி, ராசிபுரம் கல்வியியல் கல்லூரி ராசிபுரம், கபி கல்வியியல் கல்லூரி மதுரை, பவானி கல்வியியல் கல்லூரி கடலூர் ஆகிய கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக ரூ.500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், பல்கலைக்கழகத்தின் இணையதளமான www.tnou.ac.inஇல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ரூ.500 க்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும். தபால் மூலம் விண்ணப்பத்தை பெற, ரூ.550 க்கான வரைவோலையை "தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை 15' என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து, "பதிவாளர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், 577, அண்ணா சாலை, சென்னை 600015' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் முதல் தொடங்கும். பின்னர் பி.எட். வகுப்புகள் 2015 ஜனவரியில் தொடங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044 24306657 மற்றும் 044 24306658 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது எ‌ன்று அ‌ந்த கு‌றி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Saturday, May 9, 2015

சட்ட கல்லூரி விண்ணப்பம் விற்பனை ஒத்திவைப்பு


அச்சுப்பணி தாமதமானதால், சட்ட கல்லூரிகளுக்கான விண்ணப்பம் வழங்கும் பணி, ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் அறிவுறுத்தலின்படி, வரும் கல்வியாண்டு முதல், பி.எல்., படிப்பு எல்.எல்.பி., என்றும், எம்.எல்., படிப்பு எல்.எல்.எம்., என்றும் மாற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில், 'பல்கலை ஹானர்ஸ் பி.ஏ., - பி.பி.ஏ., - பி.காம்., - பி.சி.ஏ., ஆகிய எல்.எல்.பி., படிப்புகளுக்கு, மே 8ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று திட்டமிட்டபடி விண்ணப்பம் வழங்கவில்லை. விண்ணப்பம் வாங்க வந்த ஏராள மான பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் ஏமாற்றம் அடைந்தனர். விண்ணப்பங்கள் அச்சடிப்பதில் தாமதமானதால், திட்டமிட்டபடி வழங்கவில்லை. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Thursday, February 19, 2015

கூடுதலாக 450 மருத்துவ இடங்களைப் பெற தமிழக அரசு முயற்சி: எம்.சி.ஐ. அனுமதி கிடைக்குமா?
தமிழகத்தில், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில், சென்னை எம்.எம்.சி., - 250; ஸ்டான்லி - 250; மதுரை - 155 உட்பட மொத்தம் 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது.
சுயநிதி கல்லூரிகளில், ஒரு இடத்திற்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் நன்கொடை கேட்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. புதிதாக துவங்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள் உட்பட, அரசு மருத்துவக் கல்லூரியில், வரும் கல்வியாண்டில் 450 எம்.பி.பி.எஸ்., இடங்களை கூடுதலாக்க, அரசு முயற்சித்துள்ளது. எம்.சி.ஐ., அனுமதி கோரப்பட்டுள்ளது.
கூடுதல் இடங்களை அனுமதிக்கும் அளவில் போதிய வசதிகள் உள்ளதா என எம்.சி.ஐ., ஆய்வுப் பணியைத் துவங்கி உள்ளது. ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரியிலும் ஆய்வு முடிந்துள்ளது.
ஓமந்தூரார் கல்லூரிக்கு, கட்டமைப்பு பணி இன்னும் முடியவில்லை எனவும், கோவையில், போதிய பேராசிரியர், பணியாளர் இல்லை. மாணவர் விடுதிகளிலும் போதிய வசதிகள் இல்லை என, குறைகளை சுட்டிக்காட்டி உள்ளது. இதனால், இந்த கல்லூரிக்கான கூடுதல் இடங்களுக்கு அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அரசு முயற்சி
இதுகுறித்து, மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறியதாவது: கோவை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி களில் 350 இடங்களும், ஓமந்தூரார் கல்லூரியில் 100 இடம் என 450 கூடுதல் இடங்களைப் பெற, அரசு முயற்சித்து வருகிறது.
எம்.சி.ஐ., ஆய்வுசெய்து, சுட்டிக்காட்டும் குறைகளை சரிசெய்து, முறையாக அனுமதி பெறுவோம். முடிந்த அளவு, வரும் கல்வி ஆண்டிலேயே கூடுதல் இடங்களுக்கு சேர்க்கும் வகையில் முயற்சித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் இடங்கள் எங்கே?
கல்லூரி - பழைய இடம் - கூடுதல் இடம் - மொத்தம்
கோவை - 150 - 100 - 250
மதுரை - 155 - 100 - 255
நெல்லை - 150 - 100 - 250
கன்னியாகுமரி - 100 - 50 - 150
ஓமந்தூரார் - 100 - 100