Thursday, April 7, 2016

கல்லூரி முதல்வருக்கு கல்லறை; மாணவர்கள் மீது வழக்கு!

கேரளாவில்கல்லுாரியில் முதல்வராக பணியாற்றிஓய்வு பெற்றவருக்குமாதிரி கல்லறை எழுப்பிமலர் அஞ்சலி செலுத்திய மாணவர்களுக்கு எதிராகவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில்காங்கிரசைச் சேர்ந்தமுதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் உள்ளது. சட்டசபைத் தேர்தலை சந்திக்க உள்ள இம்மாநிலத்தின் பாலக்காடு நகரில், 127 ஆண்டு பாரம்பரியம் உடைய அரசு விக்டோரியா கல்லுாரி உள்ளது.
இங்குவிலங்கியல் பிரிவு பேராசிரியராக, 27 ஆண்டுகளாக பணியாற்றி, 2015 - 16ம் கல்வியாண்டில்,முதல்வராக பொறுப்பேற்றவர்டி.என்.சரசு.
இவர்மார்ச், 31ல்பணி ஓய்வு பெற்றார். இதை ஒட்டிஅன்று காலை, 7:00 மணிக்குகல்லுாரி வளாகத்தில்அவருக்குமாதிரி கல்லறை எழுப்பிய மாணவர்கள்அதற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர். 
இதுகுறித்துகல்லுாரியின் முன்னாள் முதல்வர் சரசு கூறுகையில்மாணவர்களின் நியாயமற்ற கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால்என் மீது கோபம் கொண்டு அவர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர்எனக் கூறியுள்ளார்.
மேலும்இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில்இந்திய மாணவர் சம்மேளனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிராகவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment