சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
அக்கல்லுாரி முதல்வர் வேதவல்லி கூறியதாவது: சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுõரியில் 2016-17 இளநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. எஸ்.சி.,-எஸ்.டி.,மாணவிகள் இலவசமாகவும், பொது பிரிவினர் ரூ.27 செலுத்தியும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மே 27 க்குள் அளிக்க வேண்டும்.
ஜூன் 1 ல் விளையாட்டு, என்.சி.சி.,-முன்னாள் படைவீரர் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கும்,தமிழ் இலக்கியம், ஆங்கில இலங்கியம் பாடப்பிரிவுகளுக்கும் கவுன்சிலிங் நடக்கும். தமிழில் 140 க்கு மேல், ஆங்கிலத்தில் 130 க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றோர் பங்கேற்கலாம். ஜூன் 2ல் அனைத்து இளநிலை அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான கவுன்சிலிங் நடக்கும்.
ஜூன் 3 ல் பி.காம்.,- பி.ஏ., பொருளாதாரம், தமிழ் லிட்., ஆங்கிலம் லிட்., ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கவுன்சிலிங் நடக்கும். இரண்டாவது கவுன்சிலிங் ஜூன் 4ல் நடக்கிறது. இதில் அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்கும் பங்கேற்கலாம்,என்றார்.
No comments:
Post a Comment