Monday, May 16, 2016

யு.ஜி.சி., நிதியை பயன்படுத்தாத தமிழக பல்கலைகளுக்கு சிக்கல்

சென்னை பல்கலை, அண்ணாமலை பல்கலை உள்ளிட்ட நான்கு பல்கலைக் கழகங்கள், நான்கு ஆண்டுகளாக, யு.ஜி.சி., யின் நிதியை பயன்படுத்தாதது தெரிய வந்துள்ளது.

இதனால்வரும் ஆண்டுகளில் இந்த பல்கலைகளுக்கு மானியம்கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ்நாடுமுழுவதும் பல பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றனஇவற்றில்மத்தியமாநில அரசின் பல்கலைகளுக்குபல்வேறு திட்டங்களுக்காக,யு.ஜி.சி., யில் இருந்து ஆண்டுதோறும் நிதிஉதவி வழங்கப்படுகிறது.
ஆராய்ச்சி திட்டங்கள்
இந்த நிதியில்ஆராய்ச்சி படிப்புகள் துவங்க வேண்டும்புதிய ஆராய்ச்சி திட்டங்கள் கொண்டு வரலாம்புதியபாடப்பிரிவுகளும் துவங்கலாம்இந்நிலையில்பல்கலைகளின் நிதி செலவீடு குறித்த அறிக்கையையு.ஜி.சி.,வெளியிட்டுள்ளதுஇதன்படிதமிழகத்தில் உள்ள பல அரசு பல்கலைகள்யு.ஜி.சி., ஒதுக்கிய நிதியை செலவுசெய்யாதது தெரிய வந்துள்ளது.
அறிக்கை
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கு, 7.76 கோடிகோவை பாரதியார் பல்கலைக்கு, 5.97 கோடிசென்னைபல்கலைக்கு, 10.88 கோடிசேலம் பெரியார் பல்கலைக்கு, 5.06 கோடி ரூபாய் எனநான்கு ஆண்டுகளில்மொத்தம், 29.67 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதுஇந்த நிதியைபல்கலைகள் செலவு செய்யாததால்செலவு குறித்த அறிக்கையை வழங்கவில்லை.
அதே நேரம்காரைக்குடி அழகப்பா பல்கலைசென்னை அண்ணா பல்கலைதிருச்சி பாரதிதாசன் பல்கலை,மதுரை காமராஜர் பல்கலைமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைஅன்னை தெரசா மகளிர் பல்கலை,தஞ்சை தமிழ் பல்கலைஅம்பேத்கர் சட்ட பல்கலை ஆகிய பல்கலைக்கழகங்கள்யு.ஜி.சி., நிதியை செலவுசெய்து, 29.67 கோடி ரூபாய்க்கான செலவு அறிக்கையை தாக்கல் செய்துள்ளன
இந்த பல்கலைகளுக்கு மட்டும்வரும் கல்வியாண்டில் மானியம் வழங்கயு.ஜி.சி., முடிவு செய்து உள்ளது.செலவு அறிக்கை தாக்கல் செய்யாதநான்கு பல்கலைகளுக்கும் மானியம் நிறுத்தப்படும் என தெரிகிறது.

No comments:

Post a Comment