Saturday, September 10, 2016

தொலை நிலைக்கல்வி மைய தேர்வில் முறைகேடு!

மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியின் கீழ்,தர்மபுரி கல்வி மையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதால்விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளதாகஉயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்பல்கலை பதில் மனு தாக்கல் செய்தது. 

தர்மபுரி குளோபல் அகாடமி பார் மேனேஜ்மென்ட் ஒருங்கிணைப்பாளர் நவீன்குமார் தாக்கல் செய்த மனு: எங்கள் கல்வி மையம் மதுரை காமராஜ் பல்கலையால் பதிவு செய்யப்பட்டது. தொலை நிலைக்கல்வி மையம் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த 2013ல்பல்கலையுடன் ஒப்பந்தம் செய்தோம்.2015-16 கல்வியாண்டில் எங்கள் மையம் மூலம், 400 மாணவர்கள் தொலைநிலைக் கல்வியின் கீழ் படித்தனர்.
வேலுார் மாவட்டம் திருப்பத்துாரில் ஒரு பள்ளியில், 2015 மே 17ல் தேர்வு நடந்தது. ஓராண்டிற்கு மேலாகியும்விடைத்தாளை மதிப்பீடு செய்யவில்லை. தேர்வு முடிவு வெளியாகவில்லை. விடைத்தாள்களை மதிப்பீடு செய்துதேர்வு முடிவை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.
நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார்.
பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர் பதில் மனு:---தர்மபுரி கல்வி மையம் மூலம் பயின்ற மாணவர்கள் திருப்பத்துார் மையத்தில் தேர்வு எழுதவில்லை. முறைகேடு நடந்திருக்கலாம் அல்லது &'காப்பி&' அடித்து எழுதியிருக்கலாம் என சந்தேகமாக உள்ளது. பல்கலை உயர்மட்டக்குழு விசாரித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. 
இதனால் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளோம். இவ்வாறு பதில் மனு செய்திருந்தார். விசாரணையைநீதிபதி அடுத்தவாரம் ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment