Tuesday, September 27, 2016

பந்தாடப்படும் கல்லூரி கல்வி இயக்குனர் பதவி!

தமிழக கல்லுாரிகளை நிர்வகிக்கும், கல்லுாரி கல்வி இயக்குனர் பதவி, இரண்டு ஆண்டுகளாக பந்தாடப்படுகிறது.

10 நாட்களில் காலியானகல்லுாரி கல்வி இயக்குனர் பொறுப்புதொழில்நுட்ப கல்வி இயக்குனர்ராஜேந்திர ரத்னுவுக்குகூடுதலாக தரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள, 740 கலைஅறிவியல் கல்லுாரிகள், 724 ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளைகல்லுாரி கல்வி இயக்ககம் கண்காணித்துநிர்வாக பணிகளை மேற்கொள்கிறது. இந்த இயக்ககத்தின் இயக்குனர் பதவிஇரண்டு ஆண்டுகளாகமாதந்தோறும் மாற்றிபந்தாடப்படுகிறது.
புதிய இயக்குனர்: 
கல்லுாரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்விஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். புதிய இயக்குனராகசெய்யார் அரசு கல்லுாரி முதல்வர்தேவதாஸ் நியமிக்கப்பட்டார். பின்அவர் திடீரென மாற்றப்பட்டுபுதிய இயக்குனராகபேராசிரியர் சேகர் நியமிக்கப்பட்டார். மாற்றப்பட்ட தேவதாஸ்உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துமீண்டும் பதவியை பெற்றார். 
கடந்த, 2015ல்அவர் ஓய்வு பெற்றதும்பேராசிரியர் சேகர்மீண்டும் கல்லுாரி கல்வி இயக்குனரானார். அவரது நியமனத்தை எதிர்த்துசேலம் பேராசிரியை ஒருவர் வழக்கு தொடர்ந்தார்ஆனால்சேகர் பதவில் இருந்து மாற்றப்படவில்லை.
சேகரின் பதவிக்காலம்மூன்று மாதங்களுக்கு முன் முடிந்த நிலையில்இயக்குனர் பணியிடம் மீண்டும் காலியானது. ஒரு மாத இடைவெளியில்தொழில்நுட்ப கல்வி இயக்குனர் மதுமதிக்குகல்லுாரி கல்வி இயக்குனராககூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டதுஅவரும், 10 நாட்கள் பணியாற்றிய நிலையில், 15நாட்களுக்கு முன்உணவு வழங்கல்துறை கமிஷனராக மாற்றப்பட்டார்.
தொழில்நுட்ப கல்வி இயக்குனர் பொறுப்புபூம்புகார் கப்பல் கழக மேலாண் இயக்குனர்ராஜேந்திர ரத்னுவுக்குகூடுதலாக தரப்பட்டுகடந்த வாரம் பொறுப்பேற்றார். கல்லுாரி கல்வி இயக்குனர் பொறுப்பும்,அவருக்குஇன்னொரு கூடுதல் பொறுப்பாக தரப்பட்டு உள்ளது.
சிக்கல்
இரண்டு ஆண்டுகளாககல்லுாரி கல்வி இயக்குனர் பொறுப்புதொடர்ந்து பந்தாடப்படுவதால்பேராசிரியர் நியமனம்நிர்வாக பணிகள்மாணவர் சேர்க்கை கண்காணிப்பு உள்ளிட்டபணிகளில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது.

No comments:

Post a Comment