Thursday, February 11, 2016

உதவி பேராசிரியர்கள் நியமனம் தற்காலிகமாக நிறுத்தம்

 தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலையில், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்துஅனைத்து பல்கலை மாணவர் சங்க தலைவர் வினோத்குமார் கூறியதாவது:
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலையில்,உதவி பேராசிரியர் உட்பட பல பணியிடங்களை நிரப்பஎழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடந்தது. இதில்பல முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்துஇந்த விவகாரத்தில்சி.பி.ஐ.,விசாரணை தேவை எனஅனைத்து பல்கலை மாணவர் சங்கம் சார்பில்,முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுக்கப்பட்டது. 
இது குறித்துதினமலர் நாளிதழில்நேற்று செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்துதேர்வு செய்யப்பட்டவர்களுக்குபணி நியமன ஆணை வழங்குவதற்காகநேற்று நடக்க இருந்த சிண்டிகேட் கூட்டம் நடக்கவில்லை. தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக பணியிடங்களை நிரப்புவதும் நிறுத்தப்பட்டுள்ளது. 
இதற்கு உதவியதினமலர் நாளிதழுக்கு நன்றி. இவ்வாறு வினோத்குமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment