சென்னை பல்கலை துணை வேந்தர் பதவி, ஒரு மாதமாக காலியாக உள்ளது.
புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, தேடல் குழு அமைக்கப்பட்டுஉள்ளது. சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலை பேராசிரியர் பாலசுப்ரமணியன், சென்னை பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் தேவேந்திர பிரசாத் மற்றும் தொழில் துறையை சேர்ந்த வேதநாராயணன் ஆகியோர், குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர், இரு தினங்களுக்கு ஒரு முறை கூடி, துணை வேந்தர் தேர்வு குறித்து, ஆலோசனை நடத்துகின்றனர். ஆனால், பல மட்டங்களில் இருந்தும் சிபாரிசுகள் தொடர்வதால், யாரை தேர்வு செய்வது என, தேடல் குழு திணறுகிறது. தற்போதைய நிலையில், 15 பேர் துணை வேந்தருக்கான போட்டி பட்டியலில் உள்ளனர். இந்த பட்டியலில் உள்ள சிலருக்கு, கட்சி ரீதியாகவும், சிலருக்கு அமைச்சர்கள் மூலமும், சிலருக்கு செயலகம் மூலமும் சிபாரிசுகள் வந்துள்ளன.
அதேபோல், கவர்னர் அலுவலக பெயரில், ஒருவருக்கு அழுத்தமான சிபாரிசு வந்துள்ளதாக தெரிகிறது. அதனால், துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதில், முடிவுக்கு வர முடியாமல், தேடல் குழுவினர் திணறி வருகின்றனர்.
No comments:
Post a Comment