Thursday, February 11, 2016

உயர்கல்வி கட்டணம் அரசு ஏற்க வலியுறுத்தல்

மருத்துவம்பொறியியல்சட்டம் போன்ற உயர்கல்வி பயிலும்,எம்.பி.சி.மாணவர்களின் கட்டணங்களை அரசு ஏற்க வேண்டும்எனமிக பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

மதுரை கலெக்டர் அலுவலகம் முன் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் ஞானசேகரன் வரவேற்றார். நிர்வாகிகள் சமயசெல்வம்சோணைமுத்து முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் பால்சாமிநிர்வாகிகள் வீரமணிபால்ராஜ்வெங்கடேசன்குலகன்நாகநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர். பின் அவர்கள் கலெக்டர் வீரராகவ ராவ்விடம் மனு அளித்தனர்.

No comments:

Post a Comment